ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டதா? சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் விளக்கம்
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு செயல்பட அனுமதி வழங்கவில்லை என சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலைக்கு எதிராக பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பல புகார்கள் கூறி வரும் நிலையில் ஆலைக்கு எதிராக பல புகார்கள் நிலுவையில் உள்ளதால் முழு ஆய்வுக்கு பின்னரே அந்த ஆலை இயங்க அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஆலை இயங்க அனுமதிக்க மாட்டோம் என சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தெரிவிக்காததால் போராட்டத்தை அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.