shadow

107 ரன்களில் சுருண்டது இந்தியா” ஆண்டர்சன் அபாரம்

இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் நேற்று 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சனின் அபாரமான பந்துவீச்சால் 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது. அஸ்வின் 29 ரன்களும் கேப்டன் விராத் கோஹ்லி 23 ரன்களும், எடுத்தனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முயன்றபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் ஆடும்

Leave a Reply