shadow

நியூசிலாந்தை சிதறடித்த இங்கிலாந்து: அரையிறுதிக்கு தகுதி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளதூ. நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்தை வென்று அரையிறுதிக்கு முதல்முறையாக தகுதி பெற்றது இங்கிலாந்து அணி

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 310 ரன்கள் குவித்தது. ரூட் 64 ரன்களும், பட்லர் 61 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து, இங்கிலாந்து அணியின் அதிரடி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய பால் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்

இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.

Leave a Reply