உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 303 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான எம்.எம்.அலி 128 ரன்களும், பெல் 54 ரன்களும் குவித்தனர்.
வெற்றி பெற 304 ரன்கள் தேவை என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியினர், இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர் கோட்ஜெர் மட்டும் ஓரளவு நிலைத்து ஆடி 71 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து அணி 42.2 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது. எம்.எம்.அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளை பெற்றுள்ளது. ஸ்காட்லாந்து அணி இன்னும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.