shadow

cricketஇங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் நியூசிலாந்து அணியும், ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்ற நிலையில், நேற்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. குப்தில் மற்றும் மெக்கல்லம் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து இறங்கிய வில்லியம்சன் அதிரடி ஆட்டம் மூலம் 90 ரன்கள் எடுத்ததால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது.

350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விரட்டிய இங்கிலாந்து மிக எளிதாக 44 ஓவர்களில் மூன்றே மூன்று விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 350 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இங்கிலந்து அணியின் மோர்கன் 82 பந்துகளில் 113 ரன்கள் அடித்தார். அதேபோல் ரூட், 97 பந்துகளில் 106 ரன்கள் அடித்தார்.

ஆட்டநாயகனாக மோர்கன் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.

Leave a Reply