shadow

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி. இந்தியா அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஒருநாள் போட்டி தொடர் ஆகியவற்றை வென்ற இந்திய அணி நேற்று முதல் டி-20 போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

நேற்று கான்பூரில் நடைபெற்ற இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ரெய்னா 34 ரன்களும், தோனி 36 ரன்களும் எடுத்தனர்

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாது அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 148 ரன்கள் எடுத்தது. மோர்கன் 51 ரன்களும், ரூட் 46 ரன்களும் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply