இன்னிங்ஸ் வெற்றி பெறுமா இந்தியா? சுழலில் சுருண்டு வரும் இங்கிலாந்து
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 631 ரன்கள் குவித்துள்ளது.
விராத் கோஹ்லி 235 ரன்களூம், முரளி விஜய் 136 ரன்களும், ஜெயந்த் 104 ரன்களும் எடுத்துள்ளனர். 231 ரன்கள் பின் தங்கியுள்ள இங்கிலாந்து அணி தற்போது 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 4வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணிக்கு இன்னும் 50 ரன்கள் தேவை. அதற்குள் மீதி நான்கு விக்கெட்டுக்களை இந்தியா கைபற்றினால் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இன்றைய சுழலில் இங்கிலாந்து சுருண்டு விழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.