shadow

8இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ரஹானேவின் அபாரமான சதத்தால் 295 ரன்கள் எடுத்தது. பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில்  319 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 342 ரன்கள் குவித்தது. முரளி விஜய் 95 ரன்களும், ஜடேஜா 68 ரன்களும், புவனேஷ்குமார் 52 ரன்களும் எடுத்தனர்.

வெற்றி பெற 319 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கைவசம் ஆறு விக்கெட்டுக்கள் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 214 ரன்கள் எடுக்கவேண்டும். இந்த நிலையில் இந்த போட்டியை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply