இங்கிலாந்து மகாராணிக்கு திடீர் உடல்நலக்குறைவு. புத்தாண்டு கூட்டத்தை தவிர்த்தார்
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 28 ஆண்டுகளுக்கு பின் தேவாலயத்தின் புத்தாண்டு சிறப்பு கூட்டத்தை உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தவிர்த்ததாக செய்தி வெளிவந்துள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைய இங்கிலாந்து நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலி பிபிசி டுவிட்டர் மூலம் மகாராணி மரணம் அடைந்துவிட்டதாக வதந்தி ஒன்று காட்டுத்தீ போல பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.