shadow

cricket24 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை புரிந்துள்ளது. நேற்று நடந்த 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் அபாரமாக விளையாடி வருகிறது.

நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழநது 206 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 30.3 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 106 ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிதீர்த்து கொண்டது. மேலும் 24 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்னர் அசாரூதின் தலைமையிலான இந்திய அணி கடந்த 1990ஆம் ஆண்டு 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply