shadow

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அதிர்ச்சி தோல்வி

பெண்கள் உலகக்கோப்பை பைனலில், இந்திய பெண்கள் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி இங்கிலாந்திடம் வீழ்ந்தது.

இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் பைனலில்,இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டி, இங்கிலாந்தின் பாரம்பரிய கிரிக்கெட் மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி கேப்டன் ஹெதார் நைட், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் கோஸ்வாமி அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினார்.

பூனம் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு மந்தனா ‘டக்’ அவுட்டானார். தொடர்ந்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் (17) அனாவசியமாக ரன் அவுட்டானார். தொடர்ந்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஹர்மன்பிரீத் (51) அரைசதம் அடித்து அவுட்டானார். பின் வந்த வேதா (35) ஓரளவு கைகொடுத்தார்.

எதிர்முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூனம் ராத் 86 ரன்கள் எடுத்த போது அவிட்டானார். இதன்பின் இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. ஆனால் பின் வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணி 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

Leave a Reply