பரபரப்பு தகவல்

திருப்பரங்குன்றத்தில் கோவில் யானை ஒன்றால் யானைப்பாகன் மிதைக்கப்பட்டு உயிரிழந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் கோயிலில் வளர்ந்து வரும் யானை ஒன்றை யானை பாகன் ஒருவர் வளர்த்து வந்தார். இந்த நிலையில் கோயில் யானையை குளிக்க வைக்க யானைப்பாகன் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென யானைக்கு மதம் பிடித்தது.

இதனை அடுத்து அந்த யானை அந்த பானையை போட்டு மிதித்ததாகவும், உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி யானைப்பாகன் உயிரிழந்தார்.

கோயில் யானை ஒன்றால் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply