மின் கட்டணத்தை செலுத்த வேண்டுமெனில் சம்மந்தப்பட்ட மின் அலுவலகத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றி, இனி எந்த ஊரில் உள்ள எந்த மின் அலுவலகங்களிலும் கட்டணத்தை செலுத்தலாம் என்ற புதிய நடைமுறை விரைவில் அமல்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய திட்டத்தை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். தற்போது முதல் கட்டமாக இந்த வசதியை 110 நகரங்களீல் செயல்படுத்தப்படும் என்றும் பின்னர் படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்த புதிய வசதி நடைமுறைப்படுத்தப்படும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோக தற்போது இருக்கும் வழிமுறைகளும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply