ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது, புதிய திட்டம் பற்றி அறிவித்ததாகவும், இது தேர்தல் விதியை மீறிய செயல் என்றும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

பிரச்சாரத்திற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை கொண்டு வந்ததன் மூலம் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தியிருப்பதாகவும் திமுக புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply