shadow

15aதமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 845 வேட்பாளர்களும், புதுவையில் 30 வேட்பாளர்களும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 24ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 1,261 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இதில் 367 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டஹு போக மீதியுள்ள 845 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தென்சென்னையில் அதிகபட்சமாக 42 பேர்களும், காஞ்சிபுரத்தில் குறைந்தபட்சமாக 11 பேர்களும் போட்டியிடுகின்றனர்.

இதேபோல் புதுச்சேரியில் 30 வேட்பாளர்களின் மனுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்களின் மனுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply