ராஜினாமா எதிரொலி: இளங்கோவன் ஆதரவாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ததால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று அவரது வீட்டின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள் ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும், அவரது ராஜினாமாவை மேலிட தலைவர்கள் ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட ஒரு தொண்டர் திடீரென தன்னுடைய உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அங்கிருந்த மற்ற தொண்டர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.
இதனிடையே மேலிட முடிவு எதுவாக இருந்தாலும் தான் கட்டுப்படுவதாகவும், தொண்டர்கள் உணர்ச்சிவசப்படாமல் வரும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.