shadow

.index

விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம்.

அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தேவர்கள் காலம்.

முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை ரிஷிகளின் காலம்.

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பிதுர்க்களின் காலம்.

பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை சந்தியா காலம்.

முன் இரவு 6 மணி முதல் 9 வரை பூத காலம். நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை பிரேத காலம்.

பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை ராக்ஷச காலம்

இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும் திதி,நக்ஷத்ரம் ,சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.

உதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.

ரிஷிகளின் காலத்தில் நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை,திதி, நக்ஷத்ரம் , வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.

Time-Management-Slide-5

பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும் , நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும்,ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது , நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ , முடிக்கவோ கூடாது.

Leave a Reply