ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கர துப்பாக்கி சண்டை. 8 ராணுவ வீரர்கள் வீரமரணம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையே நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சண்டையில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பேம்பூர் என்ற பகுதியில், இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது வழக்கமான பயிற்சியை முடித்துவிட்டு பேருந்து ஒன்றில் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவர்களை திடீரென வழிமறித்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் பாதுகாப்புப்படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்து கொண்டு தக்கப் பதிலடி கொடுத்தனர். பல மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் அதே சமயத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேர் வீரமரணம் அடைந்தனர். 20 வீரர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.