shadow

8 children deadஆஸ்திரேலியாவில் உள்ள  கேர்ன்ஸ் என்ற நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 மாதங்கள் முதல் 15 வயது வரை உள்ள அந்த குழந்தைகளில் ஏழு குழந்தைகளுக்கு தாயான ஒருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதன் ஒருவன் குழந்தைகளை மட்டும் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டது ஏன்? என்பது குறித்து ஆஸ்திரேலிய போலீஸார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஓட்டல் ஒன்றில் பொதுமக்களை பணையக்கைதியாக வைத்துக்கொண்டு பயமுறுத்திய தீவிரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தினால் ஆஸ்திரேலிய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பர்ட் அனைத்து பெற்றோர்களும் வெறுக்கத்தக்க இந்த சம்பவத்தால் சோகத்தில் உள்ளனர். இந்த குற்ற சம்பவத்தை வார்த்தையால் விமர்சிக்க முடியாது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Leave a Reply