முன்னாள் எகிப்து அதிபரின் மரண தண்டனை ரத்து. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கடந்த 2013ஆம் ஆண்டு எகிப்து அதிபராக இருந்த மொர்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய அரசு அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கலை கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
சிறையை உடைத்து, சிறைக்கைதிகளை தப்பிக்க வைத்ததாக மொர்சி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒரு வழக்கில் அவருக்கு மரண தண்டனை கிடைத்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்தவழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது.
இந்த தீர்ப்பில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்தநீதிபதி, வழக்கு விசாரணையை முதலில் இருந்து தொடங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பால் மொர்சி ஆதரவாளர் தங்கள் மகிழ்ச்சியை வீதியில் இறங்கி கொண்டாடி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.