மாயாவதி கட்சியின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.104 கோடி? பரபரப்பு தகவல்
செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற கொடுக்கப்பட்டுள்ள கெடு முடிய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் உ.பி. மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.104 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மாயாவதியின் சகோதரர் ஆனந்த் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் ரூ.1 கோடியே 43 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 18 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுகளாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த இரண்டு டெபாசிட் பணம் குறித்து மாயாவதி மற்றும் ஆனந்த் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த அமலாக்க பிரிவு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். மேலும் பகுஜன் சமாஜ் வங்கிக் கணக்கில் உள்ள தொகை குறித்து தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.
இந்த சம்பவம் குறித்து, மாயாவதி இன்று மதியம் 12 மணிக்கு லக்னோவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக மாயாவதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.