நாளை முதல் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பவர் கட் ஆகுமா?
தமிழகத்தில் கடந்த மாதம் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயணம் செய்ய சிரமம் அடைந்தனர். இந்த பிரச்சனை தற்போது முடிந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில் நாளை முதல் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மின்சாரம் கட் ஆகுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது
மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும், இது குறித்து நிர்வாகத்துடன் தொழிற்சங்கத்தினர் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துவிட்டதால் வேறு வழியின்றி நாளை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக மின்விநியோக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்தால் மின் விநியோகம் தடையின்றி கிடைக்க மாற்று ஏற்பாட்டை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.