கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிழக்கு இரயில்வேயில் காலியாக உள்ள குரூப்-டி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 2830

பணி: குரூப்-டி

சம்பளம்: ரூ.5200-20200+Grade Pay ரூ.1,800

வயது வரம்பு: 01.01.2014 தேதிப்படி 33-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபுபவர்களுக்கு உடல்திறன் தேர்வு நடத்தப்படும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அடங்கிய மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Senior Personnel Officer (ரெக்ரூட்‌மென்ட்) ரேல்‌வே ரெக்ரூட்‌மென்ட் Cell—Eastern ரேல்‌வே  56, C. R. Avenue RITES Building, 1ஸ்ட் ஃப்லோர், கொல்கத்தா – 700 012 “.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.11.2013

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.rrcer.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply