trainபாட்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி சட்டம் -1961 கீழ் 422 பேர் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சிக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை: 422

துறைவாரியான பயிற்சி அளிக்கப்படும் எண்ணிக்கை விவரம்:

1. Fitter – 240

2. Machinist – 02

3. Welder – 12

4. Electrician – 18

5. M.M.T.M – 01

6. Turner – 03

7. Wireman – 29

8. Mechanic – 08

9. Electronics Mechanic – 70

10. Mechanic (Diesel) – 39

வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 24 வயதிற்குள்ளும், ஓ.பி.சி பிரிவினர் 27- க்குள்ளும், SC/ST பிரிவினர் 29க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 34க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் Viva-Voce மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.40. செலுத்த வேண்டும். SC/ST/PH,முன்னாள் படைவீரர் மற்றும் பெண்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Senior Divisional Personnel Officer,

East Central Railway, Mughalsarai,

PO-Mughalsarai, District-Chandauli (UP),

PIN-232101

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.201

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.rrcecr.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply