இரவு முழுவதும் மழை: அதிகாலைக்கும் பின் கனமழை: இன்று விடுமுறையா?
சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் நேற்று இரவில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த மாவட்டங்களில் இருந்து இன்று விடுமுறை அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
மேலும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழையும், சென்னை உள்பட ஒருசில வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா என்பது குறித்த தகவல் இன்னும் சில நிமிடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் இருந்து வெளிவர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.