ஊரடங்கு உத்தரவால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்
ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் வீட்டில் உள்ள பெண்களை அவரது கணவர் அடிக்கடி துன்புறுத்துவதாகவும், இதனால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் மகளிர் ஆணையத்தில் புகார் வளர்ந்ததாக கூறப்படுகிறது
இதனை அடுத்து இந்த புகார்கள் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது
மனைவியாக இருந்தாலும் அவருடைய அனுமதியின்றி பாலியல் உறவு கொள்வது சட்டப்படி தவறு என்பதால் இது குறித்து சட்ட ரீதியாக அணுகுவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக மகளிர் அமைப்புகள் தெரிவித்து வருகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.