13 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இந்தியருக்கு துபாய் நீதிமன்றம் வழங்கிய தண்டனை
துபாய்க்கு பணி காரணமாக சென்ற இந்தியர் ஒருவர், அங்குள்ள 13 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
துபாய் நாட்டில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் இ-மெயில் கணக்கை சமீபத்தில் அச்சிறுமியின் தாய் திறந்து பார்த்தபோது அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஆபாச படங்கள் ஒரு இமெயில் கணக்கில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.
அச்சிறுமியிடம் இது குறித்து தாய் விசாரணை செய்தபோது, அவர்கள் குடும்பத்திற்கு அறிமுகமான ஒரு 27 வயது இந்தியர் ஆபாச படங்களை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த துபாய் கோர்ட், அந்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.