shadow

வகுப்பறையில் போதையில் உருண்ட ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க கல்வித்துறைக்கு வலியுறுத்தல்

ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களே சிலசமயம் ஒழுக்கமின்றி நடந்து வரும் கொடூரம் பள்ளிகளில் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மேலப்பூவந்தி அரசு உயர்நிலைப் பள்ளி ஒரு ஆசிரிர்யர் போதையில் வகுப்பறையில் படுத்து உருண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

220 மாணவர்கள், 13 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் ஒரு ஆண்டாக காலியாக உள்ளது. இந்த நிலைஇல் ஆசிரியர் சிவகுருநாதன் என்பவர் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று, விளையாட்டு ஆசிரியர் ரஜினிகாந்த் என்பவர் பள்ளிக்கு வரும்போதே போதையில் இருந்ததாகவும், வகுப்பறைக்கு வந்ததுடன், படுத்து உருண்டதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக வலைத்தளங்களி பரவியது. இதனையடுத்து பெற்றோர் மற்றும் மாணவர்களின் புகாரின் படி, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply