shadow

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜனவரி 6-ல் இணைகிறார்களாமே

நானு ரெளடிதான்’ படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதல் வயப்பட்டு அந்த காதல் தற்போது திருமணம் வரை சென்றுள்ளது என்பதும், இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘டோரா’ என்ற திகில் படத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடலான ‘எங்கே போற டோரா’ என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஆகியது.

அதேபோல் இந்த படத்தின் இரண்டாம் பாடல் வரும் ஜனவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாம். இந்த பாடலை நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்த இந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply