தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது. பிரபல நடிகை ஆவேச பேச்சு
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 10 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த 5ஆம் தேதி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டதில் இருந்தே கர்நாடக மாநிலத்தில் பதட்ட நிலை காணப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று அங்கு முழு அடைப்பு போராட்டமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க கூடாது என்றும் காவிரி கர்நாடகத்திற்கு சொந்தமானது என்றும் பிரபல நடிகை ராகினி திவேதி கூறியுள்ளார். கர்நாடக மக்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தரமுடியும் என்றும் இதற்காக தான் வீதியில் இறங்கி போராட்டம் செய்யவுள்ளதாகவும் வீடியோ செய்தி ஒன்றை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
நடிகை திரிவேணி கன்னட திரையுலகில் பிரபல நடிகை என்பதும் தமிழில் இவர் ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ என்ற படத்தின் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.