shadow

முதல் நாளில் என்னென்ன செய்ய போகிறேன். டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

donaldஅமெரிக்க அதிபர் தேர்தலில் அனைவரின் கருத்துக்கணிப்புகளையும் தகர்த்து வெற்றி வாகை சூடிய டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் பதவியேற்ற முதல் நாளில் என்னென்ன அறிவிப்புகள் செய்யவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

முதல்கட்டமாக டொனால்ட் டிரம்ப் செய்யவுள்ளது டி.பி.பி.’ என்று அழைக்கப்படுகிற பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, விலக்கிக்கொள்வதுதானாம். இந்த வர்த்தக ஒப்பந்தம், 2015ஆம் ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளிடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இன்னும் அந்தந்த நாடுகள் முறைப்படி ஒப்புதல் வழங்கவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் 12 நாடுகளின் மந்திரிகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது உலக பொருளாதாரத்தில் 40 சதவீத பங்களிப்பு செய்யக்கூடியதாகும். இப்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்காவின் நடவடிக்கை, உள்நாட்டில் புதிய தொழிற்சாலைகளையும், வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித்தரும் என்பது டிரம்பின் நம்பிக்கை.

அதே நேரத்தில் ஒபாமா கேர் சுகாதார காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது பற்றியோ, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது பற்றியோ டிரம்ப் தனது முன்னுரிமைப்பட்டியலில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply