shadow

2033ல் செவ்வாயின் மனிதர்கள். புதிய திட்டத்தில் டிரம்ப் கையெழுத்து

செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றது என்பதால் அங்கு மனிதர்களை குடியமர்த்தும் ஆரம்ப கட்ட பணிகளை விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த ஆராய்ச்சி திட்டம் ஒன்றின் மசோதாவின் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்படி வரும் 2033 ஆம் ஆண்டு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கென 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பவதோடு மட்டுமின்றி விண்வெளி ஆய்வுகள், ஒரியன் விண்கலத்திற்கான பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதுதவிர விண்வெளியில் மனிதர்களை அனுப்புவது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2030க்குள் செவ்வாய் கிரகத்தின் அருகில் அல்லது அதன் மேற்பரப்பில் மனிதர்கள் செல்ல ஏதுவான நீண்ட கால திட்டத்தினை வகுக்கவும், அதற்கான விண்கலத்தை உருவாக்கவும் நாசாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply