shadow

   ஐ.நா.சபை பொழுதுபோக்கும் கிளப் போல மாறிவிட்டது. டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது முஸ்லீம்கள் உள்பட பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்த டொனால்ட் டிரம்ப், தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் சர்ச்சைக்கருத்துக்கள் கூறுவதை நிறுத்தவில்லை. தற்போது ஐ.நா சபை குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில், “ஐ.நா. சபை மிகப்பெரிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. ஆனால் தற்போது அது மக்கள் ஒன்றாகக்கூடி, பேசி, நன்றாக பொழுது போக்குகிற கிளப் போல மாறி விட்டது” என கூறியுள்ளார்.

கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதிகளில், இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த வாரம் மலேசியா, நியூசிலாந்து, செனகல், வெனிசுலா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து தீர்மானம் கொண்டு வந்தன.

இதில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்து, ஓட்டெடுப்பின்போது அமெரிக்கா தனது மறுப்பு ஓட்டுரிமையை பயன்படுத்த வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தினார். ஆனால் அதை ஒபாமா அரசு நிராகரித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிரான அந்த தீர்மானம் நிறைவேறியது.

தனது விருப்பம் நிறைவேறாத நிலையில்தான் இப்போது ஐ.நா. சபையை டிரம்ப் சாடி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply