shadow

உடலில் இருந்து ஆன்மா பிரிவதை புகைப்படம் எடுத்த லாரி டிரைவர்

121-ம் நூற்றாண்டில் எத்தனையோ புதுப்புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஒரு மனிதனுக்கு உயிர் போகும் நேரம், பிரிந்த உயிர் எங்கே போகிறது என்ற உண்மையை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டுபிடிக்க முடியவில்லை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இதுவொரு புரியாத புதிராக இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தை சேர்ந்த, சால் வாஸ்க்வெஸ் என்ற லாரி டிரைவர் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை ஆம்புலன்சில் ஏற்றும் போது அவரது உடலின் சற்று மேல் பகுதியில் ஒரு மங்கலான உருவம் மிதப்பது போல் பதிவாகி உள்ளது.

ஒருவரின் உடலில் இருந்து ஆன்மா வெளியேறுவது போன்று தோன்றும் இந்த புகைப்படத்தை, ஆவி குறித்து நம்பிக்கை கொண்ட ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply