shadow

சிபிஐ சோதனையின்போது ப.சிதம்பரம் எங்கிருந்தார் தெரியுமா?

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, ப.சிதம்பரம் எங்கிருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் தனது மகன் மற்றும் தனது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது எந்தவித டென்ஷனும் இல்லாமல் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு வழக்கில் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினாராம் ப.சிதம்பரம்

“மெட்ரோ கேஷ் அண்ட் கேரி” எனும் தனியார் நிறுவனத்தின் தலைவர் கணேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை எதிர்த்து பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் வாதாடியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், ‘எனது குரலை ஒடுக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது. சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை உபயோகித்து, என் மகன் மற்றும் அவரது நண்பர்களை மத்திய அரசு குறி வைத்து தாக்குகிறது என சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

Leave a Reply