இது பேரணி அல்ல, போர்: திமுக தலைவர் ஸ்டாலின் முழக்கம்
குடியுரிமை சீர் திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று காலை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்திய பிரம்மாண்டமான பேரணி சற்று முன்னர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பேரணி சற்றுமுன்னர் முடிவடைந்தத்ஜு. இந்த நிலையில் பேரணி முடிவில் திமுக கூட்டணி கட்சிகளின் பிரமாண்டமான கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ’திமுக கூட்டணி நடத்திய பேரணி அல்ல, போர் அணி என்றும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் கூறினார்
மேலும் பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்த அரசுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்து கொண்டார் இந்தப் பேரணியில் கலந்துகொண்ட வைகோ கூறியபோது, ‘இந்தப் பேரணி பா.ஜ.க அரசை குலைநடுங்கச் செய்திருக்கும். நாம் குளவிக்கூட்டில் கைவைத்துவிட்டோம் என அவர்கள் உணர்கிற காலம் வரும்.” என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.