shadow

குடியரசு தலைவரை சந்திப்பது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

kanimozhiகடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அகில இந்திய தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பிக்கள் அனைவரும் கனிமொழி தலைமையில் இன்று டெல்லியில் குடியரசு தலைவரை சந்திக்கின்றனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் குடியரசு தலைவரிடம் விளக்கம் அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த சந்திப்பு குறித்து கனிமொழி எம்.பி சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘தமிழகத்துக்கு காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடகா திறந்துவிடாததால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுறுத்தலின் பேரில், திமுக எம்.பி.கள் குடியரசுத்தலைவரை சந்தித்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்த கோரிக்கை வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply