shadow

admkதிமுகவில் அழகிரி-ஸ்டாலின் பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருப்பதால் அந்த கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் எந்த பக்கமும் சாய முடியாமல் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் அதிமுகவுக்கு தாவ உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

திமுகவின் அதிருப்தி லிஸ்ட்டில் உள்ள  கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதா கிருஷ்ணன், ரகுபதி, முல்லைவேந்தன் மற்றும் பழனி மாணிக்கம் ஆகியோர் விரைவில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிரது.

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், ரகுபதி, தி.மு.க உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இவர்களுடன் மேலும் பல தி.மு.க.வினர் போயஸ்கார்டனில் விரைவில் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக தகவல் உலாவிக் கொண்டு இருக்கின்றன.

டி.ஆர்.பாலுவுடன் ஏற்பட்டுள்ள மோதலால் தொகுதியை இழந்த பழனிமாணிக்கம் தி.மு.க. தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் முல்லைவேந்தன் உள்பட ஒருசிலர் இந்த செய்தியை மறுத்துவந்தாலும், கருப்பசாமி பாண்டியன் இன்று அல்லது நாளை அதிமுகவில் சேருவது உறுதி என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply