shadow

ஜெயலலிதா பாணியை கையில் எடுக்கும் திமுக தலைமை: கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் தோல்வி மட்டுமின்றி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட்டை பறிகொடுத்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2ஜி வழக்கின் தீர்ப்பு, கூட்டணி கட்சிகள் ஆதரவு, இரண்டாக உடைந்த அதிமுக ஆகியவை இருந்தும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கு இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது

இந்த நிலையில் திமுகவுக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரி ஒருவர் திமுகவின் தோல்விக்கு கூட்டணி கட்சிகளே காரணம் என்றும், கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட திமுக தனித்து நின்றிருந்தால் திமுக ஆட்சியை பிடித்திருக்கும் என்றும் ஆதாரபூர்வ அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்

இந்த அறிக்கையை படித்ததும் அனைத்து கூட்டணி கட்சிகளையும் கழட்டிவிட்டு ஜெயலலிதா பாணியில் இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து நிற்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply