தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தனக்கும் இடையே ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருப்பினும், இலங்கையின் சிங்கள அரசு முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்டால் அதை திமுக வேடிக்கை பார்க்காது என்றும், இந்த விஷயத்தில் தமிழக முதல்வருக்கு முழு ஒத்துழைப்பு திமுக தரப்பில் இருந்து கொடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கீழ்த்தரமான, இழிவான விமர்சனங்களை எதிர்ப்பதில் தி.மு.க. எப்போதுமே தயங்கியதில்லை. அந்த கடுமொழிகளையும், இழிமொழிகளையும் கண்டிக்க திமுக என்றுமே தவறியதும் இல்லை. அப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு எந்தவிதத்திலும் நடந்துகொள்ளக்கூடாது என்று திமுக சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.
இலங்கை அரசின் இழிவான கட்டுரை தமிழக முதல்வரை மட்டுமல்ல; இந்திய நாட்டு பிரதமரையும்தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தில், இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் என்ற முறையில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.