shadow

12aதேமுதிக கட்சி அறிவித்த நாமக்கல் தொகுதி வேட்பாளர் திடீரென தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் தேமுதிக கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த், நேற்று முன் தினம் தனது கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக மகேஸ்வரன் என்பவரை அறிவித்தார். இன்று மாலை திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லாததால், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்று நாமக்கல் தொகுதியில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென மகேஸ்வரனின் உடல்நிலை பாதித்ததால், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கபப்ட்டார். மருத்துவர்களின் ஆலோசனையின்படி தான் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், அவருக்கு பதிலாக வேறு வேட்பாளரை இன்று இரவுக்குள் விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Leave a Reply