பெட்ரோலுக்கு பதிலாக பருப்பு. பிரபல இயக்குனர் கூறிய ஐடியா
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்திற்கு திரையுலகினர் ஆதரவு கொடுத்தது போலவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் எதிர்த்து விவசாயிகளின் தோளோடு தோளாக நின்று திரையுலகினர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ், விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்கள் கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் நேற்று நெடுவாசல் மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
பொதுமக்கள் விருப்பத்திற்கு மாறாக இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று கூறும் மத்திய, மாநில அரசுகள் பின் ஏன் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இப்படி எல்லா நலத்திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தால், எப்படி பெட்ரோல் எடுப்பது என கேள்வி கேட்கும் மத்திய அரசு, பருப்பை இங்கே உற்பத்தி செய்துவிட்டு பெட்ரோலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோம் என அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.