தூத்துகுடிக்கு சென்று ஆறுதல் கூறிய பிரபல இயக்குனர்
இளையதளபதி விஜய் உள்பட பல கோலிவுட் திரையுலகினர் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான மற்றும் காயம் அடைந்த குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிதியுதவியும் செய்து வந்தனர் என்பது தெரிந்ததே
அந்த வகையில் தற்போது தூத்துகுடிக்கு சென்ற அடுத்த பிரபலம் இயக்குனர் ஹரி. இயக்குனர் ஹரி நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 13 பேர்களின் வீட்டுக்கு சென்று அவர்களுடைய குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஹரியின் வருகை தங்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்ததாக பலியான குடும்பத்தினர்களில் ஒருவர் தெரிவித்தார்
ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துகுடி அருகே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.