shadow

ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கோரினார் தினமணி ஆசிரியர்

சமீபத்தில் இராஜபாளையத்தில் தினமணி நாளிதழ் ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வைரமுத்து தெரிவித்ததாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் வைரமுத்து மற்றும் தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன் ஆகிய இருவரும் ஆண்டாள் சன்னதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜீயர் சடகோப ராமானுஜர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். மன்னிப்பு கேட்பது குறித்து வைரமுத்து தரப்பிடம் இருந்து இதுவரை எந்தவித தகவலும் வெளிவராத நிலையில், இன்று காலை ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்த தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கோரினார். மேலும் போராட்டம் நடத்திவ் அரும் ஜீயரை அவர் சந்தித்தார்.

இருப்பினும் வைரமுத்துவும் ஆண்டாள் சந்நிதியில் நேரில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என ஜீயர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply