தினகரன் தேர்வு செய்த கட்சியின் மூன்று பெயர்கள்: டெல்லி ஐகோர்ட் எதை ஏற்கும்?
அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு கொண்டிருக்கும் தினகரன் அணிக்கு தற்போது பெயரே இல்லாமல் உள்ளது. இதற்காக தனது கட்சியின் பெயரை தேர்வு செய்ய அவர் மூன்று பெயர்களை தேர்வு செய்து டெல்லி ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். இதில் ஒன்றை டெல்லி ஐகோர்ட் தினகரன் அணியின் கட்சி பெயராக தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரன் தனது அணிக்காக அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா முன்னேற கழகம், அம்மா எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் என மூன்று பெயர்களை தேர்வு செய்து டெல்லி ஐகோர்ட்டில் சம்மதித்துள்ளார்.
இந்த பெயர்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மூன்றில் ஒன்றை அவர் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.