வருத்தம் தெரிவித்த பின்னர் விமர்சனம் தேவையில்லை. எச்.ராஜா குறித்து தினகரன்
பெரியார் சிலை குறித்து எச்.ராஜா பதிவு செய்த கருத்து கண்டித்தக்கதுதான். எனினும் அவர் வருத்தம் தெரிவித்த பின்னரும் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்துவருவது அரசியல்தான் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மேலும் இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது என்று கூறிய தினகரன், ‘பெரியார் சிலை பற்றி ராஜா சொன்ன கருத்துக்கு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டி முதல்வர் கண்டிக்கவில்லை என்றும் ராஜாவின் அட்மினை கண்டித்ததில் இருந்தே இது தெரிகிறது என்றும் கூறினார்.
மேலும் காவிரி போன்ற பொதுப் பிரச்னைகளில் அனைத்துக் கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவோம். ஆனால் தமிழகத்தில் பி.ஜே.பி-யை எதிர்க்க பிற கட்சிகளுடன் இணைந்து செயல்படக்கூடிய அளவுக்கு பி.ஜே.பி ஒன்றும் பெரிய கட்சி அல்ல என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.