சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலக விரும்புவதாக அணியின் உரிமையாளருக்கு தோனி கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சூதாட்ட சர்ச்சையில் தோனி உள்பட ஆறு வீரர்களின் பெயர் அடிபட்டது. சென்னை அணியின் தலைவர் சீனிவாசனை பிசிசிஐ பொறுப்பில் இருந்து விலகும்படி சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கின்போது சீனிவாசன் குறித்து சில தவறான தகவல்கள் தோனி கூறியதால்தான், தான் பதவி விலக நேர்ந்ததாக சீனிவாசன் தரப்பில் கூறப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கடித எழுதியுள்ளார். அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. தோனி விலகினால் கேப்டன் பொறுப்பை அஸ்வின் அல்லது ஜடேஜா ஏற்பார் என கூறப்படுகிறது.,
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2010 மற்றும், 2011 ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.