வங்காளதேசத்தில் வருகிற 25ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ள ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் தோனி, விலகியுள்ளார்.

நியூசிலாந்து தொடரில் விளையாடியபோது ஏற்பட்ட காயம் காரணமாக தோனிக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் ஆலோசனை கூறியதால், தோனி இந்த போட்டியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறாது.

தோனி போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அன்னிய மண்ணில் தொடர் தோல்வியை பெற்று வரும் இந்திய அணி, விராட் கோஹ்லி தலையில் அசத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply