shadow

dhoniநேற்றைய ஆட்டத்தில் வெளிநாட்டு வீரர்களின் பொறுப்பற்ற ஆட்ட்த்தினால்தான் சென்னை அணி தோல்வி அடைந்தது என மறைமுகமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து தோனி கூறியதாவது:

நேற்று பஞ்சாப் அணியின் இமாலய ரன்களை சுரேஷ் ரெய்னாவின் அதிரடியால் மிக எளிதில் எட்டிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஏழாவது ஓவரில் மெக்கல்லம் எடுத்த தவறான முடிவினால் சுரேஷ் ரெய்னா ரன் அவுட் ஆனார். மேலும் நேற்றைய ஆட்டத்தில் விளையாடிய நான்கு வெளிநாட்டு வீரர்களான ஸ்மித், மெக்கல்லம், டீ பிளஸ்ஸிஸ் மற்றும் டேவிட் ஹஸ்சி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெற்றி வாய்ப்பை இழக்கும்படி செய்துவிட்டனர்.

மேலும் சுழற்பந்து வீச்சாளர்களின் பொறுப்பற்ற பந்துவீச்சினால் பஞ்சாப் அணி மிக அதிக இலக்கை தங்களுக்கு கொடுத்துவிட்டதாகவும், இதுபோன்ற முக்கிய போட்டிகளில் சுழற்பந்து வீரர்கள் பொறுப்புடன் ஆடவேண்டும் என்றும் தோனி கூறினார்.

நேற்றைய சேவாக்கின் அதிரடி ஆட்டமே பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணம் என்றும், அவர் அடித்து விளையாட ஆரம்பித்துவிட்டால் அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் தோனி கூறினார்.

Leave a Reply