உத்தரபிரதேசத்தில் தரம் ஜக்ரன் சமிதி என்ற இந்து அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பு கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மதம் மாறினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் வட மாநிலங்களில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்து மதத்திற்கு மாறும் கிறிஸ்துவர்களுக்கு ரூ.2 லட்சமும், முஸ்லீம்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்ததோடு அதை நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் பல ஆண்டுகளாக அடிக்கடி மதக்கலவரம் ஏற்பட்டு தற்போதுதான் ஓரளவுக்கு அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில் மீண்டும் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இந்த நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்படுவதாக
‘தரம் ஜக்ரன் சமிதி’ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறும்ப்போது, ‘‘நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம். தற்போது மீடியாக்கள்தான் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்துகின்றன. நாங்கள் இதுபோன்ற முகாம்களை வெளியே தெரியாமல் நடத்தி வருகிறோம்” என்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.